கடந்த
2013 ஆகஸ்டில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது.
இத்தேர்விற்கு நவ. 5ல் வெளியிடப்பட்ட
முடிவில் 27 ஆயிரத்து 92 பேர் பேர் தேர்ச்சி
பெற்றனர். மீண்டும் ஜன. 10ல் விடைகளில்
மாறுதல் செய்ததில் 2 ஆயிரத்து 300 பேர்
ஆனால், தேர்வு முடிந்து ஓராண்டாகியும் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் எத்தனை பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என்பது குறித்து அரசு சார்பில் அறிவிப்பில்லை. இந்த கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் நடந்து வரும் நிலை யில் இதுவரை ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படாததால் தேர்ச்சியடைந்தவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் கூறுகையில், ‘தகுதி தேர்வு அறிவிப்பில் இருந்தே பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது. தெளிவான முடிவில்லாத நிலையில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு பணி நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, விரைவில் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
No comments:
Post a Comment