scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

October 12, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதென தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில்  60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.

அதில் நான் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியுள்ளேன். தமிழக முதல்வர் அறிவித்த 5% மதிப்பெண் தளர்வு மூலம் வெற்றி பெற்றேன் இதன் மூலம் நான் அரசு உதவி பெறும் பள்ளியில் சேரலாம் என இருந்த நேரத்தில் மதுரை உயர் நீதிமன்ற கிளை இந்த அரசானையை ரத்து செய்தது இதனால் என் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசானை ரத்து செய்ததை மேல் முறையிடு தமிழக அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்

தமிழக அரசு அளித்த பதில்: Reply given vide Govt Lr.No.32942/TRB/14-1, Dt.9.10.2014. The order of the Honble Madurai Bench of Madras High Court, dated 25.09.2014 has not yet been received by the Government. After the receipt of the order, the Government will take necessary steps on the feasibility of filing an appeal in the above case மேல் முறையீடு செய்யப்படும் என பதில் அளித்துள்ளது.

மேல்முறையீடு செய்தால் தமிழக அரசுக்கு இந்த வழக்கில் வெற்றி கிடைக்கும் டெல்லியில் சுப்ரிம் கோர்ட் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த 5% மதிப்பெண் தளர்வு   அரசின் கொள்கை தாராளமாக வழங்கலாம் என கூறி இதற்கு முன் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதால்  மீண்டும் 5% மதிப்பெண் தளர்வு உறுதியாகியுள்ளது.

இரண்டாம் பட்டியல்

இந்த வழக்கு வருவதால் இரண்டாம் பட்டியலில் 5% மதிப்பெண் தளர்வு சேர்த்து வரலாம் அதனால் சற்று தாமதம் ஆகலாம். இல்லை என்றால் அரசு நீதிமன்றத்தின் அனுமதியுடன் 5% மதிப்பெண் தளர்வு உடையவர்களையும் சேர்த்து பட்டியல் வெளியிட்டு வழக்கு முடிவதற்குள் கலந்தாய்வு நடத்தி வழக்கு முடிந்ததும் பணி நியமனம் செய்யப்படலாம் என தெளிவாக தெரிகிறது. இதன் மூலம் இரண்டாம் பட்டியல் உள்ள குழப்பம் தீர்ந்துள்ளது.

No comments:

Post a Comment