scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

November 09, 2014

குரூப்-4 தேர்வு; 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்

      தமிழகத்தில் குருப் 4 தேர்வு எழுத இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

              தமிழகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. 1064 பதவிகளுக்கு நடைபெறும் தேர்வில் 11497 பேர் 2 கட்ட ஆன்லைன் தேர்வு மற்றும் விரிவான எழுத்து தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வுகள் நேற்று நடைபெற்றது. பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆன்லைன் கணினி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலை வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார். தேர்வாணைய தேர்வு கட்டு பாட்டு அலுவலர் வி.ஷோபனா மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

              பின்னர் பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில்: குருப் 2 இரண்டாம் கட்ட எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 1064 பணியிடங்களுக்கு 11,497 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 44 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் 12 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

காலையில் ஆன்லைன் கணினி மூலம் தேர்வுகளும், மாலையில் விரிவான எழுத்து தேர்வும் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதாச்சார அடிப்படையில் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு தேர்ச்சி பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். குரூப் 2 பிரதான தேர்வு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படுவது போல விரைவில் பிற தேர்வுகளும் இதே முறையில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குருப் 4 தேர்வுகளுக்கு இதுவரை 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். விஏஒ தேர்வு முடிவு: தமிழகத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் இன்னும் 4 வாரங்களில் வெளிவரும். அதில், தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment