scroll

welcome


counter

E-MAIL


உங்கள் படைப்புகள்,அரசாணைகள்,பயனுள்ள படிவங்கள்,பயனுள்ள தகவல்கள்,பள்ளியின் சிறப்புகள் போன்றவற்றை எங்கள் E-MAIL : pumsskpvn@gmail.com க்கு அனுப்பிவையுங்கள்.!

தற்போதைய செய்திகள்

ANNUAL DAY FUNCTION 2014

December 11, 2014

சுகாதார அலுவலர் பதவி: காலியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சுகாதார அலுவலர் பதவியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொது சுகாதாரப் பணியிலுள்ள சுகாதார அலுவலர் (ஏங்ஹப்ற்ட் ஞச்ச்ண்ஸ்ரீங்ழ்) பதவியில் 33 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு B.S.Sc., (Bachelor of Sanitary Science) அல்லது Diploma in Public Health அல்லது Licentiate in Public Health அல்லது M.B.B.S அல்லது DMS அல்லது LMP கல்வித்தகுதியினை உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் www.tnpscexams.net என்ற ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பதவிக்கான எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி சென்னை மையத்தில் நடைபெறும். இப்பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜனவரி 9. மேலும் வயது வரம்பு, கல்வித் தகுதி, பொதுவான தகவல்கள், தகுதி குறித்த விவரங்கள், எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு திட்டம், தேர்வு மையம், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், தடையின்மைச் சான்று, சலுகைகள் மற்றும் பிற முக்கிய அறிவுரைகள் தொடர்பான விவரங்களை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளன என்று விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment